ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள்களின் உருவங்கள் இருப்பதாகவும், அவற்றிற்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 14-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மசூதியில் காலை 8-12 மணி வரை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ’பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஆய்வு தொடர்பான அறிக்கையை வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.